பி.எஸ்.என்.எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு டாக்டைம் கடன் வரம்பு ரூ.50 ஆக அதிகரிப்பு

 

பி.எஸ்.என்.எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு டாக்டைம் கடன் வரம்பு ரூ.50 ஆக அதிகரிப்பு

டெல்லி: பி.எஸ்.என்.எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு டாக்டைம் கடன் வரம்பு ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவசரத் தேவைக்காக பல டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டாக்டைம் கடன் அளித்து வருகின்றன. பெரும்பாலும் இது ரூ.10 ஆக உள்ளது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 டாக்டைம் கடன் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு டாக்டைம் கடன் வரம்பு (Talktime Loan Limit) ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5117# என்ற யு.எஸ்.எஸ்.டி எண்ணுக்கு பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் கால் செய்தால் ரூ.10, ரூ.20, ரூ.30 மற்றும் ரூ.50 ஆகிய டாக்டைம் கடன்கள் அளிக்கப்படும். அதில் தேவையான தொகையை வாடிக்கையாளர்கள் டாக்டைம் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.  பின்னர் தங்கள் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யும்போது கடன் தொகை கழித்துக் கொள்ளப்படும்.