600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய மெகா பிரீபெய்டு பிளான் – பி.எஸ்.என்.எல் அறிமுகம்
டெல்லி: 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மிகப்பெரிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,399 ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) தனது சத்தீஸ்கர் ட்விட்டர் கணக்கு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் நாளொன்றுக்கு 250 நிமிடங்கள் இலவச வாய்ஸ்கால் பலன் வழங்கப்படுகிறது. மேலும் நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
#COVID19 महामारी व लॉकडाउन के चलते #बीएसएनएल अपने उपभोक्ताओं के लिए लम्बी वैधता के ₹ 699/- एवम् ₹ 2399/-
नए वाउचर्स लाया है ।#StayHomeStaySafe Use #MyBsnlApp for online recharge pic.twitter.com/oYqh6FAn3K— BSNL_Chhattisgarh (@BSNL_CG_Circle) May 25, 2020
ஆனால் டேட்டா பலன்கள் எதுவும் இந்த ரீசார்ஜ் பிளானில் இடம்பெறவில்லை. இந்த பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானை ஆக்டிவேட் செய்த பிறகு முதல் 60 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டங்களிலேயே அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.