தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அண்ணன் – தம்பி : காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

 

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அண்ணன் – தம்பி : காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை பகுதியில் வசித்து வந்த சகோதரர்கள் வினோத் மற்றும் சதீஷ். வினோத்திற்கு திருமணமாகி 2 வயது பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. சதீஷ்க்கும் 6 மாத பெண் குழந்தை இருக்கிறதாம். இவர்கள் இருவரும் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். ஓராண்டுக்கு முன் இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அண்ணன் – தம்பி : காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

இருவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு பேசுவதும், மனைவியை துன்புறுத்துவதும், உறவினர்களை வீட்டுக்கு வர வேண்டாம் என சொல்வதும், மீறி யாரேனும் வந்தால் அசிங்கமாக பேசுவதுமாகவே வினோத் மற்றும் சதீஷ் இருந்துள்ளனர். அதோடு, அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளையும் வீட்டுக்குள்ளே வைத்து பூட்டி வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று வினோத் மற்றும் சதீஷ் தங்களது மனைவிகளை ரூமில் பூட்டி வைத்து விட்டு தனித்தனியே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஜன்னல் வழியே இவர்கள் தூக்கிடுவதை பார்த்த வினோத்தின் மனைவி கூச்சலிட்டுள்ளார். உடனே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து திறப்பதற்குள் இருவரும் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.