பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பலி!

 

பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பலி!

திருப்பூர்

திருப்பூரில் பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் சத்யா (13), குமரன் (11). இவர்கள் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 8 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் நேற்று கோல்டன் நகரில் உள்ள பாறைக்குழிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் இரவு ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி அலைந்தனர்.

பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பலி!

இந்த நிலையில், பாறைக்குழி அருகே சிறுவர்களின் சைக்கிள் மற்றும் உடை கிடப்பதை பார்த்த உறவினர்கள் இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாக்க்குழியில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி சத்யா மற்றும் குமரனின் உடலை மீட்டனர்.

தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்