தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலி!

 

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலி!

தஞ்சாவூர்

தஞ்சை அருகே நேற்று வெட்டாற்றில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் பாஸ்கரன் (24), அபினேஷ் (23). அபினேஷ் பொறியியல் படித்துள்ளார். இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் நேற்று மாலை, நண்பர்களுடன் சேர்ந்து தென் பெரம்பூர் தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றனர். வெட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாஸ்கரனும், அபினேஷும் தண்ணீரில் அடித்துச செல்லப்பட்டனர்.

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலி!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள், உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவலின் பேரில் நடுக் காவேரி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கி அண்ணன் – தம்பி பலியான சம்பவம் கரந்தை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.