சொத்து தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்

 

சொத்து தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்

சிவகிரி அருகே சொத்துத் தகராறில் தம்பியை உருட்டு கட்டையால், அண்ணன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பழமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த அவரது அண்ணன் சசிக்குமார் என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கனகராஜின் வீட்டிற்கு சென்ற சசிக்குமார், அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கனகராஜின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிவகிரி போலீசார், தப்பியோடி சசிக்குமாரை தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்