அவசர கதியில் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டுவந்தது ஏற்புடையது இல்லை! – டி.டி.வி.தினகரன் கண்டனம்

 

அவசர கதியில் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டுவந்தது ஏற்புடையது இல்லை! – டி.டி.வி.தினகரன் கண்டனம்

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், அவசர கதியில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்திருப்பது ஏற்புடையது இல்லை என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவசர கதியில் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டுவந்தது ஏற்புடையது இல்லை! – டி.டி.வி.தினகரன் கண்டனம்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்களைச் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கொரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல.

http://


இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையானதை மட்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.