மக்கள் பசியில் இருக்கிறார்கள்.. ஆனால் கட்டிடம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி செலவிட கவலைப்படாத மோடி அரசு

 

மக்கள் பசியில் இருக்கிறார்கள்.. ஆனால் கட்டிடம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி செலவிட கவலைப்படாத மோடி அரசு

மக்கள் பசி மற்றும் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மன்றம் கட்டுவதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவிட மோடி அரசு கவலைப்படவில்லை என்று பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளை மத்திய அரசு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டும் மத்திய அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கூறியதாவது:

மக்கள் பசியில் இருக்கிறார்கள்.. ஆனால் கட்டிடம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி செலவிட கவலைப்படாத மோடி அரசு
புதிய நாடாளுமன்ற வளாகம் (மாதிரி)

மக்கள் பட்டினியோடு, வேலையில்லாமல் இருக்கும்போது, ரூ.20 ஆயிரம் கோடி செலவிட அவர்கள் கவலைப்படவில்லை. இந்த திட்டததை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது ஒரு அவமானம். இந்த திட்டம் முற்றிலும் தவறானது என்று சில சிறந்த கட்டிட கலைஞர்கள், நகர திட்டமிடுபவர்கள், நகர்ப்புற வளர்ச்சியில் பணிபுரியும் நபர்கள் கூறுகின்றனர். அவர்கள் இந்த திட்டத்தை மிகவும் உறுதியாக அடிப்படையில் எதிர்த்தனர். ஆனால் அரசாங்கம் அதை வலியுறுத்துகிறது.

மக்கள் பசியில் இருக்கிறார்கள்.. ஆனால் கட்டிடம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி செலவிட கவலைப்படாத மோடி அரசு
பிரதமர் மோடி

இது மக்களின் தேவைகளை பற்றி இந்த மோடி அரசாங்கத்தின் மொத்த உணர்வற்ற தன்மையை காட்டுகிறது. பொதுமக்கள் உணவு தானியங்களை விரும்புகிறார்கள், அவர்களுக்கு வேலை வேண்டும், அரசாங்க அமைச்சர்களுக்கு மிகப்பெரிய பரந்த அரண்மனையை அவர்கள் விரும்பவில்லை. இது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.