மும்பையில் கங்கனாவிற்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு!

 

மும்பையில் கங்கனாவிற்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு!

மும்பையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு சொந்தமான கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளனர்.

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அதில், சுஷாந்த் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சி முக்கிய பிரமுகரும், மும்பை போலீஸாரும் துணையாக இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்தார்.

மும்பையில் கங்கனாவிற்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு!

இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் செக்யுரிட்டியை அளித்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் மும்பையில் கங்கனாவுக்கு சொந்தமான கட்டடத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளனர். இதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.