நிலத்தகராறில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை!

 

நிலத்தகராறில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை!

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே நிலத் தகராறில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, ராஜேந்திரன், சில நாட்களுக்கு முன்பு, அந்த பகுதியில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். அப்போது, தனது தாத்தாவிடம் நிலத்தை ஏமாற்றி வாங்கியதாக கூறி, அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

நிலத்தகராறில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை!

இதனால் இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, கிராம பஞ்சாயத்தார் பிரச்சினைக்குரிய நிலத்தை இரு தரப்பினரும் பிரித்து கொள்ளும் படி கூறியுள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்து ராஜேந்திரன் கையெழுத்திட்டும் உள்ளார். இந்த நிலையில், தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கியதாக கூறி அவர், எதிர் தரப்பினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்த ராஜேந்திரனை மர்மநபர்கள் சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடினர். தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகராறில் தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.