வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி!

 

வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி!

நாகை

வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த வேளாணிமுந்தல் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(55). இவர் அவரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட வைணவன்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செங்கல் சூளையில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்த வந்தார்.

வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி!

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, காளிதாஸ் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், அவரது பேரன் விஷ்வா (4) படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.