ஆவடியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை…

 

ஆவடியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை…

சென்னை

ஆவடி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் செந்தூர் பாண்டியன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாவில் வைத்திருந்த 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதேபோல், மளிகை கடையின் அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து, 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

ஆவடியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை…

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், மர்மநபர்கள் இருவர் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.