பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு: பக்கத்து கல்லாவில் இருந்த 7 லட்சம் தப்பியது

 

பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு: பக்கத்து கல்லாவில் இருந்த 7 லட்சம் தப்பியது

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அய்யனார்(40). இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் செட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு: பக்கத்து கல்லாவில் இருந்த 7 லட்சம் தப்பியது

இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த கடையில் சோதனை செய்தபோது கடைக்குள் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அதன் அருகே உள்ள மற்றொரு கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.7 லட்சம் கொள்ளையன் கண்ணில் படாததால் அந்த பணம் தப்பியது தெரியவந்தது.

பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு: பக்கத்து கல்லாவில் இருந்த 7 லட்சம் தப்பியது

அதன் அருகிலேயே உள்ள அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கு பணம், பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை . ஒரே நாள் இரவில் போரூரில் அடுத்தடுத்து ஐந்து கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.