Breaking News:ஹைதராபாத்தில் பரபரப்பு… பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை.. காமக் கொடூரர்கள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

 

Breaking News:ஹைதராபாத்தில் பரபரப்பு… பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை.. காமக் கொடூரர்கள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஐதராபாத் கால்நடை மருத்துவ ரான பிரியங்கா ரெட்டி கடந்த புதன்கிழமை இரவு தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரை உயிரோடு எரித்து கொன்றது.

இது தொடர்பாக 4 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்கள் ஹைதராபாத் செஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் மைனர்கள். 14 நாட்கள் சிறைக்காவ லில் உள்ள இவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஷாத் நகர் போலீஸார் முடிவு செய்தனர். 

அதன்படி, குற்றவாளிகள் 4 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரை, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று மாலை அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து 4 பேரையும் சிறைச்சாலையில் இருந்து மகபூப் நகர் போலீஸ் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது தப்ப முயன்றதால் போலீஸார் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.