#BREAKING ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்!

 

#BREAKING ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்!

கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

#BREAKING ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்!

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் , ஐபிஎல் போட்டி கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டது.

#BREAKING ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்!


கொல்கத்தா அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா, சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கு கொரோனா, ஐதராபாத் அணியில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.மே 30 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் நடப்பு ஐபிஎல் 2021 தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது . அத்துடன் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு, போட்டி மீண்டும் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.