#BREAKING முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

 

#BREAKING முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரின் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவரால் 3 முறை கருவுற்று கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அடித்து காயம் ஏற்படுதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

#BREAKING முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

இந்நிலையில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்குப்பதிவு பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் , கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் காவல்துறையில் நடிகை கடந்த 28 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

#BREAKING முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அவரை தேடி வந்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர் . இந்த சூழலில் மணிகண்டன் கைதாகியுள்ளார். அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.