#Breaking அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

 

#Breaking அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

#Breaking அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திகேய சிவசேனாபதி தாக்கப்பட்டார். அவர் வாக்குச்சாவடிக்குள் வெளியேபி வராதபடி உள்ளே வைத்து பூட்டப்பட, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேய சிவசேனாபதியை மீட்டு காரில் அனுப்பி வைக்க முற்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக மற்றும் பாஜகவின சிவசேனாபதி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்தினர். இது மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்தார்.

#Breaking அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் குனியமுத்தூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில், அதிமுக துண்டு அணிந்து சென்றார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட குனியமுத்தூர் போலீசார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.