ஈரோட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

 

ஈரோட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

ஈரோடு

ஈரோட்டில் நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் மணல்மேடு பகுதியில் புகழ்பெற்ற பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை பூஜைகள் முடிந்து, கோயிலை பூசாரி பூட்டிச் சென்றார். நேற்று அதிகாலை கோயிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கோயில் திறந்து கிடந்தது.

ஈரோட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளே இருந்த சுமார் 5 அயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட தெரியவந்தது. இது குறித்து அவர் சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.