வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சரவன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

இவர் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்ற நிலையில், இன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து வேலூர் திரும்பிய ஜெயராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, கொள்ளை குறித்து சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை