ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை!

 

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை!

கோவை

கோவையில் ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (38). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சேலத்தில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அருண்குமார் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை!

சேலத்தில் இருந்து நேற்றிரவு வீட்டிற்கு திரும்பியோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ள வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளை சம்பவம் குறித்த அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.