அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

 

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

சென்னை

மதுரவாயல் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் அருகேயுள்ள எம்எம்டிஏ காலனியில் நேற்று நள்ளிரவு மர்மகும்பல் ஒன்று, அடுத்தடுத்து இருந்த பெட்டிக்கடை, மளிகை மற்றும் பால்கடை என 3 கடைகளின் பூட்டை உடைத்து கொண்டிருந்துள்ளனர். இதனை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மதுரவாயல் போலிசார் விரைந்து சென்ற நிலையில், அதற்குள்ளாக கொள்ளை கும்பல் தப்பி ஓடியது. பின்னர் இதுகுறித்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடைகளில் சோதனை செய்தபோது, 3 கடைகளில் இருந்தும் சுமார் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.