சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

 

சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

சேலம்

சேலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்று பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள ஆணையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(55). இவர் கடந்த ஞாயிறு அன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் படுத்து உறங்கினார். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 2 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றனர்.

சேலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

காலையில் எழுந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதேபோல் அவரது பக்கத்து வீடுகளில் வசிக்கும் இந்திராணி என்பவரது வீட்டில் இருந்த 2 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணமும், கொழுஞ்சி என்பவரது வீட்டில் ஒரு சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில் கெங்கவல்லி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.