நெஞ்சை உலுக்கும் படம்… காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தாத்தா மீது ஏறி அழுத 3 வயது பேரன்

 

நெஞ்சை உலுக்கும் படம்… காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தாத்தா மீது ஏறி அழுத 3 வயது பேரன்

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகளுக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் முதியவர் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் மீது அவருடைய பேரன் ஏறி அமர்ந்த காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்திருந்தது.
காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை அறிந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அங்கு விரைந்தனர். இரு தரப்புக்கும் இடையே அங்கு துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது. இதை அறியாமல் அந்த வழியாக தன்னுடைய பேரனை அழைத்து வந்த முதியவர் இதில் மாட்டிக்கொண்டார். பயங்கரவாதிகள் சுட்டதில் அவர் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தாத்தாவின் உடலிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்ட 3 வயது சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் அலறித் துடித்துள்ளான். அவர் உடல் மீது ஏறி எழுப்ப முயன்றுள்ளான்.
பயங்கரவாதிகளையும் பொருட்படுத்தாமல் ஒரு பாதுகாப்புப் படை வீரர் ஓடிவந்து சிறுவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு சென்று காப்பாற்றினார்.

Image
சிறுவன் தாத்தா மீது அமர்ந்து அழும் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் செய்தி, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்த சிறுவனுக்காக தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த சிறுவன் யார், அந்த முதியவர் யார் என்று தெரியவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் தான் சிறுவனின் குடும்பத்தினர் இருப்பார்கள் என்பதால், எப்படியும் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்துவிடுவோம் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.