தம் அடித்த சிறுவன் -மிரட்டிய நண்பன் -அடுத்து பட்டப்பகலில் நடந்த பாதக செயல்

 

தம் அடித்த சிறுவன் -மிரட்டிய நண்பன் -அடுத்து பட்டப்பகலில் நடந்த பாதக செயல்

தம் அடிப்பதை பெற்றோரிடம் சொல்வேன் என்று மிரட்டிய நண்பனை, ஒரு சிறுவன் கொலை செய்த சம்பவம் பலரை அதிர செய்துள்ளது.

தம் அடித்த சிறுவன் -மிரட்டிய நண்பன் -அடுத்து பட்டப்பகலில் நடந்த பாதக செயல்

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவின் குடம்பா பகுதியில்  வசிக்கும் சவுரப் என்ற 14 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 13 வயதான சிறுவனோடு நண்பனாக இருந்தான் .இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் .இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த சௌரப்பின் பெற்றோர் அவரை கடைக்கு காய் கறி வாங்க அனுப்பினார்கள் .அப்போது அவரோடு அவரின் நண்பரையும் அழைத்துக்கொண்டு கடைக்கு போனார் .

பின்னர் இருவரும் ஒரு மறைவான இடத்தில்  அமர்ந்தனர்.அப்போது சௌரவ் தனது செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது அவரின் நண்பர் சிகெரட்டை எடுத்து தம் அடித்தார் .அதை பார்த்த சௌரப் , தம் அடிப்பதை நிறுத்துமாறும் ,இல்லையெனில் அவரின் பெற்றோரிடம் இதை கூறி விடுவதாக மிரட்டினார் .இதனால் இருவருக்குள்ளும் சண்டை வந்தது .உடனே அந்த நண்பர் சௌரப்பை அடித்து ,ஒரு ப்ளேடை எடுத்து அவரின் இரு மணிக்கட்டையும் அறுத்து கொலை செய்து விட்டு ஓடிவிட்டார் .பின்னர் சவுறப்பை காணாத  அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது சிசிடிவி கேமெராவின் உதவியால் அந்த நண்பரை கொன்ற சிறுவனை கைது செய்தனர் .