கும்பகோணம் அருகே ரயில் மோதி சிறுவன் பலி… மாட்டை காப்பாற்ற சென்றபோது நிகழ்ந்த சோகம்!

 

கும்பகோணம் அருகே ரயில் மோதி சிறுவன் பலி… மாட்டை காப்பாற்ற சென்றபோது நிகழ்ந்த சோகம்!

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே தண்டவாளத்தில் நின்ற மாட்டை காப்பாற்ற முயன்றபோது ரயில் மோதியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தான்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தை சேர்ந்தவர் அருமதுரை. விவசாயி. இவரது மகன் திலீப்குமார்(14). இவர் கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் திலீப்குமார், வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

கும்பகோணம் அருகே ரயில் மோதி சிறுவன் பலி… மாட்டை காப்பாற்ற சென்றபோது நிகழ்ந்த சோகம்!

நேற்று தாராசுரம் ரயில்வே கேட் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, ஒரு மாடு தண்டாளத்திற்கு அருகே சென்றுள்ளது. அப்போது, அந்த வழியாக மயிலாடுதுறையில் இருந்த கோவை நோக்கி விரைவு ரயில் வந்துள்ளது. இதனை பார்த்த திலிப்குமார், மாடு அடிபட்டு விடும் என பயந்து அதனை விரட்டுவதற்காக தண்டாள பகுதிக்கு ஓடினார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கும்பகோணம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரகின்றனர்.