குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி!

 

குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி!

நாமக்கல்

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

நாமக்கல் அருகே உள்ள சவாடி தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். கூலி தொழிலாளி. இவரது 9 வயது மகன் சஞ்சீவ் ஆரவ். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுவன் சஞ்சீவ் ஆரவ், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடி உள்ளார்.

குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சஞ்சீவ் ஆரவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து, சிறுவனின் தந்தை ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.