செல்ஃபி மோகம்: ரயில் மீது ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

 

செல்ஃபி மோகம்: ரயில் மீது ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

நெல்லை அருகே செல்ஃபி எடுப்பதற்காக ரயில் மீது ஏறிய சிறுவன் மின் அழுத்த கம்பி உரசியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்குமார். இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் நிலையில், இன்று தனது மகன் ஜானேஸ்வர்(14)ஐ அழைத்துக் கொண்டு பணியிடத்துக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் ஜங்ஷன் ரயில் நிலையம் இருக்கிறது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஜானேஸ்வர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் மீது ஏறியுள்ளார்.

செல்ஃபி மோகம்: ரயில் மீது ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

மேலே ஏறிய ஜானேஸ்வர் செல்ஃபி எடுக்க கையை மேலே உயர்த்திய நிலையில், உயர் அழுத்த மின்கம்பியில் அவரது கை உரசியது. மின்சாரம் தாக்கியதில் ரயில் மீதிருந்து தூக்கி வீசப்பட்ட ஜானேஸ்வர், சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.