“சீறி பாய்ந்த BMW கார் ,மோதி பறந்த ஐஸ் க்ரீம் வண்டி” -ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிந்த பலர் பரிதாப நிலையில் ..

 

“சீறி பாய்ந்த BMW கார் ,மோதி பறந்த ஐஸ் க்ரீம் வண்டி” -ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிந்த பலர் பரிதாப நிலையில் ..

ஒரு பணக்கார வீட்டு பெண் தன்னுடைய புத்தம் புதிய BMW காரை ஓட்டி வந்து ,ஒரு ஐஸ் கிரீம் வண்டி மீது மோதியதால் பலர் காயமடைந்துள்ளனர் .

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் வசிக்கும் 29 வயதான ரோஷனி அரோரா என்ற பெண், கைலாஷின் கிழக்கில் சப்னா சினிமா அருகே வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய புதிய BMW காரில் வேகமாக வந்து கொண்டிருந்தார் .அப்போது அவரின் அந்த கார் சாலையின் ஓரமாக நின்ற ஒரு ஐஸ் கிரீம் வண்டி மீது பயங்கரமாக மோதியது .இந்த காட்சி சினிமா போல இருந்தது என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள் .

“சீறி பாய்ந்த BMW கார் ,மோதி பறந்த ஐஸ் க்ரீம் வண்டி” -ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிந்த பலர் பரிதாப நிலையில் ..
அந்த அழகிய பெண் ஓட்டி வந்த அந்த கார் மோதியதில் அங்கு ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் கடுமையான காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்த விபத்தில் காயமடைந்த முகேஷ் குமார், சப்னா குமாரி, குடு மற்றும் ஹர்ஷித் கவுர் ஆகிய நால்வர் சிகிச்சையில் மருத்துவமனையில் இருக்கிறார்கள் .மேலும் போலீசார் இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து ,அந்த காரை ஓட்டி வந்த ரோஷினியை கைது செய்தனர் .அப்போது அந்த பெண் தான் கார் ஓட்டி வந்த போது ஒரு நாய் குறுக்கே வந்ததால் தன்னால் வண்டியை கண்ட்ரோல் பண்ண முடியாததால் இந்த விபத்து நடந்ததாக கூறினார் .மேலும் போலீசார் அந்த பெண் குடிபோதையில் இருந்தாரா என்று சோதனை செய்த போது அவர் குடிக்கவில்லை என்பது உறுதியானது .இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“சீறி பாய்ந்த BMW கார் ,மோதி பறந்த ஐஸ் க்ரீம் வண்டி” -ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிந்த பலர் பரிதாப நிலையில் ..