எல்லை பதற்றம் – லடாக் புறப்படும் திருச்சி ஆயுதப்படை

 

எல்லை பதற்றம் – லடாக் புறப்படும் திருச்சி ஆயுதப்படை

இந்தியா சீனா எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் பரபரப்பான சூழலில் திருச்சி ஆயுதபடை துறைத் தலைவருக்கு கடிதம் உதவிதளவாய் மூலம் வான் தந்தி செய்தியாக வந்துள்ளது.

எல்லை பதற்றம் – லடாக் புறப்படும் திருச்சி ஆயுதப்படை

இக்கடிதத்தில் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் ஒரு மாத காலம் பணிபுரிய 1 ஆய்வாளர், 1 சார்பு ஆய்வாளர், 5 அவில்தார்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. எனவே தங்களது நிறும / குழுமங்களில் பணி புரியும் அவில்தார்கள் முதல் ஆய்வாளர்கள் வரை விருப்பம் உள்ளவர்களிடம் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் பணிபுரிய விருப்பம் தெரிவிப்பவர்களின் விவரத்தினை இன்று உடனடியாக அலுவலகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லை பதற்றம் – லடாக் புறப்படும் திருச்சி ஆயுதப்படை

மேலும் அவ்வாறு விருப்பம் தெரிவிக்கும் நபர்களை மேற்கண்ட பணிக்கு பணி நியமனம் செய்து அனுப்பப்படுவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது. “இது மிகவும் அவசரம் காலதாமதத்தை தவிர்க்கவும்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 பேர் செல்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.