10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வரும் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

இதனிடையே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் படி இன்று புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.