தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்… விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

 

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்…  விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

மக்களவை தேர்தலின்போது போலி சாதி சான்றிதழைச் சமர்ப்பித்ததற்காக அமராவதி எம்பி நவ்னீத் கவுர் ராணாவுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மும்பை உயர் நீதிமன்றமத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது. அந்தச் சான்றிதழை ரத்துசெய்துள்ள நீதிமன்றம் ஆறு மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது. அவர் எம்பி பதவியை இழக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்றம் அதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்…  விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரம் அமராவதி. இது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான தனித்தொகுதி. இந்தத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு சிவசேனா வேட்பாளர் ஆனந்த்ராவ் அதுசுல்லுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் அதே ஆனந்த்ராவை எதிர்த்துப் போட்டியிட்டார். இம்முறை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டதால், ஆனந்த்ராவை தோற்கடித்து எம்பியானார். மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பெண் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்…  விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

நவ்னீத் போலி சாதி சான்றிதழைச் சமர்பித்து தனித்தொகுதியில் போட்டியிட்டார் என குற்றஞ்சாட்டி தோல்வியடைந்த ஆனந்தராவ் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதாவது நவ்னீத் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். அவர் லபானா சாதியைச் சேர்ந்தவர். இந்தச் சாதியனது மகாராஷ்டிராவின் பட்டியலின சாதிக்குள் அடங்காது. ஆனால் அவர் பட்டியலினத்திற்குள் வரும் மோச்சி என்ற சாதியின் பெயரில் சாதி சான்றிதழை சட்டவிரோதமாக போலி ஆவணங்களைச் சமர்பித்து பெற்றிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து இன்று நாக்பூர் கிளை தீர்ப்பு வழங்கியது.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்…  விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் போலியாக சாதி சான்றிதழை நவ்னீத் வாங்கியது உறுதியாகியிருக்கிறது என்றும், அது ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. இந்தச் செயலில் ஈடுபட்டதற்காக அவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அந்த அபாராதத்தை மகாராஷ்டிரா சட்ட சேவைகள் ஆணையத்திடம் இரண்டு வாரக் காலங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆறு வாரங்களுக்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியது.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்…  விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

தீர்ப்பு குறித்து பேசியுள்ள நவ்னீத், “இந்த நாட்டின் குடிமகளாக நீதிமன்றத்தின் உத்தரவை நான் மதிக்கிறேன். அதேசமயம், நான் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவேன். அங்கு எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். இவரின் கணவர் பிரபல தெலுங்கு நடிகரான ரவி ராணா சினிமாவிலிருந்து ஒதுங்கி மகாராஷ்டிர அரசியலுக்குள் நுழைந்தார். 2009ஆம் ஆண்டு பத்னேரா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்…  விஜயகாந்த் பட நடிகைக்கு பறிபோகும் எம்பி பதவி?

சினிமா நடிகையான நவ்னீத் விஜய்காந்த்துடன் அரசாங்கம், கருணாஸுடன் அம்பாசமுத்திர அம்பானி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பிலிருந்து விலகிய இவர் 2011ஆம் ஆண்டு ராணாவை திருமணம் செய்துகொண்டார். தனது கணவரின் அரசியல் செல்வாக்கை கொண்டு 2013ஆம் ஆண்டு போலி சாதி சான்றிதழை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.