ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும், அவர் தற்போது துடுப்பதியில் இருப்பதாகவும் உடனே வந்து பார்க்காவிட்டால் சங்கை அறுத்து விடுவேன் என்றும் கூறிவிட்டு தொலை பேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் எண்ணை வைத்து அந்த நபரை கண்டுபிடித்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அந்த நபர் பெருந்துறை அடுத்த துடுப்பதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவுரிசங்கரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.