கண்னூர் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல்! – மார்க்சிஸ்ட் கம்யூ வெறிச் செயல்

 

கண்னூர் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல்! – மார்க்சிஸ்ட் கம்யூ வெறிச் செயல்


கேரளாவில் இரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்ணூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுக்க பதற்றமான சூழல் உள்ளது.

கண்னூர் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல்! – மார்க்சிஸ்ட் கம்யூ வெறிச் செயல்


கேரள தலைநகர் திருவனந்தபுரம் வெஞ்சராமூடு என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மிதில் ராஜ், ஹக் முகம்மது ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கண்னூர் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல்! – மார்க்சிஸ்ட் கம்யூ வெறிச் செயல்


பல இடங்களில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டு வருகிறது. கண்ணூர் நாதாபுரத்தில் உள்ள மண்டல காங்கிரஸ் அலுவகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். கக்கோடு மண்டல காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நுழைந்து அடித்து துவம்சம் செய்தனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் இரு கட்சிகளின் கொடிக் கம்பங்களும் வெட்டி சாய்க்கப்படுகிறது. பதற்றமான நிலை நிலவுகிறது. கலவரத்தைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.