“சினிமா எடுத்தால் சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம்” -நூறு பேரை ஏமாற்றி ஆறு கோடி ஆட்டைய போட்ட பாலிவுட் தயாரிப்பாளர்.

 

“சினிமா எடுத்தால் சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம்” -நூறு பேரை ஏமாற்றி ஆறு கோடி ஆட்டைய போட்ட பாலிவுட் தயாரிப்பாளர்.

பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளர், சினிமா எடுப்பதாக பொது மக்களை ஏமாற்றி ஆறு கோடி பணம் வசூலித்து
ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்டார் .
பாலிவுட்டில் சந்திரகாந்த் சர்மா என்ற நபர்” சினிமிர்ச்சி புரொடக்ஷன்ஸ் ” என்ற பேனரில் சினிமா தயாரிக்க பொது மக்களிடம் ஆறு கோடி ருபாய் பணத்தை வசூல் செய்தார் .அவர் தங்கள் பட நிறுவனத்தில் மூலம் முதலீட்டாளர்களுக்கு வாரந்தோறும் 70 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளிப்பதாக உறுதியளித்து முதலீட்டாளர்களை கவர்ந்தார். இதனால் அவரின் பேச்சை நம்பியும் ,எய்ம்ஸ் ஊழியர்கள் சிலரின் பேச்சை நம்பியும் 100 பேருக்கு மேல் அவரிடம் பணம் கொடுத்தனர் .

“சினிமா எடுத்தால் சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம்” -நூறு பேரை ஏமாற்றி ஆறு கோடி ஆட்டைய போட்ட பாலிவுட் தயாரிப்பாளர்.
இதில் முதலீடு செய்த ஒருவர் கூறுகையில், ” சந்திரகாந்த சர்மாவும் அவரது மனைவியும் பாலிவுட் பிரபலங்களுடன் இருப்பது போல சில புகைப்படங்களை கிளிக் செய்து, பெரிய அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டு முதலீட்டாளர்களை ஈர்த்தனர். அவர்கள் இப்படி மக்களிடம் பெற்ற முதலீட்டின் மூலம் “லஸ்ட் வாலா லவ்” மற்றும் “தி கிரேட் இந்தியன் கேசினோ” ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளனர் , இருப்பினும், அந்த படங்களின் வெளியீடுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
அவர் 100கும் மேற்ப்பட்டவர்களிடம் இப்படி படம் தயாரிக்க ஆறு கோடி ரூபாய் வசூலித்து, இதுவரை யாருக்கும் பணம் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார் .சில பேர் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது,அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .மேலும் அவரை பலர் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர் அடிக்கடி வேறு மாநிலங்களுக்கு சென்று தலைமறைவாகி விடுகிறார் .இதனால்; பாதிக்கப்பட்ட 88 பேருக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர் .போலீசார் அவர்களின் புகாரை ஏற்றுக்கொண்டு அந்த மோசடி தயரிப்பாளர் சந்திரகாந்தை சண்டிகரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

“சினிமா எடுத்தால் சீக்கிரம் கோடீஸ்வரனாகலாம்” -நூறு பேரை ஏமாற்றி ஆறு கோடி ஆட்டைய போட்ட பாலிவுட் தயாரிப்பாளர்.