அருணாச்சல பிரதேச நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம்… அதிர்ச்சியில் மதுரை!

 

அருணாச்சல பிரதேச நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம்… அதிர்ச்சியில் மதுரை!

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இடி, மின்னலும் இருப்பதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த வாரம் மின்னல் தாக்கில் 60க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதனால் அங்கே மழை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டதாலும் மரணங்கள் ஏற்படுகின்றன.

அருணாச்சல பிரதேச நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம்… அதிர்ச்சியில் மதுரை!

சில நாட்களுக்கு முன் மும்பையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். இதேபோல 2 நாட்களுக்கு முன் அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் மரணமடைந்தார். மதுரை வில்லாபுரம் வீட்டு வசதிவாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிர்வேல்.

அருணாச்சல பிரதேச நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம்… அதிர்ச்சியில் மதுரை!

36 வயதாகும் இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும், ஹனிஷ்க்(7), பார்த்திவ்(3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அவர் மரணமடைந்ததை தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் அவரது உடலை அசாம் தலைமையகத்துக்குக் கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் விமானம் மூலம் நேற்று இரவு 8.30 மணியளவில் மதுரை கொண்டுவரப்பட்டது. அதற்குப் பின்னர் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இன்று ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது