மேற்கு வங்கம்: தூக்கில் தொங்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ! – கொலை எனக் குற்றச்சாட்டு

 

மேற்கு வங்கம்: தூக்கில் தொங்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ! – கொலை எனக் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ தேபேந்திரநாத் ரேயின் உடன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு வங்கம்: தூக்கில் தொங்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ! – கொலை எனக் குற்றச்சாட்டுமேற்கு வங்கம் உத்தர் திஜ்நாபூரில் உள்ள ஹேம்தாபாத் தனித் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றவர் தேபேந்திர நாத் ரே. இவர் உடல் அவருடைய கிராமத்து வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அவரை கொலை செய்துவிட்டு பிறகு தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு வங்கம்: தூக்கில் தொங்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ! – கொலை எனக் குற்றச்சாட்டுஇதனால், பா.ஜ.க தொண்டர்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், பா.ஜ.க-வினரே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட அவரைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.