“லத்தி மற்றும் மேசையில் ரத்தக் கறை; சாட்சியங்களை அழித்த காவல்துறை” : மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அதிர வைக்கும் அறிக்கை!

 

“லத்தி மற்றும் மேசையில் ரத்தக் கறை; சாட்சியங்களை அழித்த காவல்துறை” : மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அதிர வைக்கும் அறிக்கை!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“லத்தி மற்றும் மேசையில் ரத்தக் கறை; சாட்சியங்களை அழித்த காவல்துறை” : மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அதிர வைக்கும் அறிக்கை!

இந்நிலையில் இந்த விவாகரத்தின் விசாரணை குறித்து உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கை கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சியான பெண் தலைமை காவலர் ரேவதி வாக்குமூலம் அளித்துள்ளார்.  சிசிடிவி காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. பெண் தலைமை காவலர் ரேவதி வாக்குமூலம் அளிக்கும் போது மிகவும் அச்சத்துடன் இருந்தார். சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டனர்.

“லத்தி மற்றும் மேசையில் ரத்தக் கறை; சாட்சியங்களை அழித்த காவல்துறை” : மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அதிர வைக்கும் அறிக்கை!

லத்தி மற்றும் மேசையில் ரத்தக் கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.அங்குள்ள ஒரு காவலரிடம் லத்தியை கேட்டபோது அவர் எகிறி குதித்து அங்கிருந்து தப்பிவிட்டார். காவலர் மகாராஜன் என்னிடம் இல்லை, அது என் அறையில் இருக்கிறது, ஊரில் வைத்து விட்டேன் என்று மாறி மாறி கூறிய பிறகு தான் நிர்பந்தத்தின் படியே அவர் லத்தியை கொடுத்தார். விசாரணையை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பும் அளவிற்கு போலீசார் அச்சுறுத்தல் தந்தனர்” என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.