உதயநிதி பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் ரத்த தானம்
Nov 28, 2020, 15:28 IST1606557492000
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 43-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அக்கட்சியினர் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டனர். இதனையொட்டி திமுக இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமை, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் எம்.பியும் ஆன அந்தியூர் செல்வராஜ், தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர, திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திமுக நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டிபி சச்சிதானந்தம், திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.