தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இன்று சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், திருவரங்குளம், கொத்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதே போல தேனி மாவட்டம் கும்பக்கரை, சேத்துப்பாறை அணை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், புதுப்பாளையம், சித்தலிங்கமடம், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.