டெல்லியில் குண்டுவெடிப்பு

 

டெல்லியில் குண்டுவெடிப்பு

டெல்லியில், இஸ்ரேலிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

டெல்லியில் குண்டுவெடிப்பு

இஸ்ரேலிய தூதரகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றன. குண்டுவெடிப்பில், இதுவரை உயிரிழப்பு நிகழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் பகுதியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.