அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன்… தற்கொலை செய்து கொண்ட காதலி!
Jun 15, 2020, 13:42 IST1592208741000
பிக்ஸ்டாக் மரியா என்ற பெண்ணும் ஜாவித் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். மரியா ஜாவீதுடன் சமரசமாக போக மறுத்ததால் பெண்ணின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றப் போவதாக காதலர் மிரட்டியுள்ளார். புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருக்க 3 லட்சம் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார் ஜாவித். இதனால் விரக்தியடைந்த மரியா தற்கொலை செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்படும் ஜாவித் மரியாவையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். போலீஸ் இந்தசம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.