“கடன் கொடுத்து என்னை கண்டமாக்கிட்டானே” -டாக்டரை துண்டு துண்டாக்கிய நர்ஸ்.

 

“கடன் கொடுத்து என்னை கண்டமாக்கிட்டானே” -டாக்டரை துண்டு துண்டாக்கிய நர்ஸ்.

தனக்கு பாலியல் டார்ச்சர் செய்த ஒரு டாக்டரை அவரிடமே பணிபுரியும் ஒரு நர்ஸ் கொலை செய்து துண்டு துண்டுகளாக நறுக்கிய சம்பவம் பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .

“கடன் கொடுத்து என்னை கண்டமாக்கிட்டானே” -டாக்டரை துண்டு துண்டாக்கிய நர்ஸ்.

சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் யூலினில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் நர்ஸ் லி ஃபெங்பிங் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பெரிதும் அடிமையாக இருந்தார். அந்த சூதாட்டத்திற்காக அந்த மருத்துவமனையின் எலும்பியல் டாக்டர் லூவோ யுவான்ஜியனிடம் நிறைய கடன் வாங்கினார்.
ஆனால் யுவான்ஜியன் அந்த கடன் தொகைக்கு பதிலாக அவருடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார் . அவர் கொடுத்த பணத்திற்காக அந்த நர்ஸிடம் வாரத்திற்கு மூன்று முறை உறவு கொண்டு அவரை கொடுமை செய்துள்ளார்.
இந்த டாக்டர் தன்னை ,பாலியல் உறவில் பிளாக்மெயில் செய்யப்பட்டதால் கோபமடைந்த நர்ஸ் ஃபெங்பிங், யுவான்ஜியனை பழிவாங்க முடிவு செய்தார். அதனால் இந்த ஆண்டு மார்ச் 23 அன்று யூலினில் உள்ள மருத்துவமனைக்கு பின்னால் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரைக் கொன்றார். பின்னர், பொலிஸ் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, அவள் அவனது உடலை துண்டு துண்டுகளாக நறுக்கி, சமைத்து, பின்னர் அவற்றை கழிப்பறையிலிருந்து வெளியேற்றினாள்.
இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் அந்த நர்ஸ் கைது செய்யப்பட்டார் .பிறகு கோர்ட்டில் நடந்த வழக்கில் அவரின் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது .இதனால் நீதிபதிகள் அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்தார்கள் .அந்த செவிலியரை தூக்கிலிடும் தேதியை நீதிமன்றம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை .

“கடன் கொடுத்து என்னை கண்டமாக்கிட்டானே” -டாக்டரை துண்டு துண்டாக்கிய நர்ஸ்.