மொடக்குறிச்சியில் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் முப்பெரும் விழா

 

மொடக்குறிச்சியில் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் முப்பெரும் விழா

பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. மேற்படி பிரிவின் மாவட்டத் தலைவர் ஏ. எம் .சீனிவாசன் அலுவலகம் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ராஜா அலுவலகமும், மாநில தலைவர் சி. பாண்டித்துரை ஜி திறந்து வைக்கப்பட்டது.

மாநில செயலாளர் பி.எம். மணிவண்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகிய பழனிசாமி, பொன். ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் அணியின் மாநில துணைத்தலைவர் தண்டபாணி, பட்டியலின மாநில துணை தலைவர் விநாயகமூர்த்தி , முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் ஆர். பி. சுந்தரம், அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட தலைவர் சக்தி சுப்பிரமணியம் மற்றும் மண்டல தலைவர்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி எழுபதாவது பிறந்தநாள் விழா மொடக்குறிச்சியில் நடைபெற்றது. விழாவிற்கு தொழிலாளர் பிரிவின் மாவட்ட தலைவர் எம் சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவின் போது மேற்படி பிரிவின் மாநில தலைவர் சி . பாண்டித்துரை தொழில் சங்க கொடியை ஏற்றி வைத்து 70 ஆண்கள் மற்றும் 70 பெண்களுக்கு வேஷ்டி சேலைகள் வழங்கினார்.