ராகுல் காந்திக்கு அறிவே இல்லை.. சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் நன்கொடை பெறுகிறது.. பா.ஜ.க. பதிலடி

 

ராகுல் காந்திக்கு அறிவே இல்லை.. சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் நன்கொடை பெறுகிறது.. பா.ஜ.க. பதிலடி

ராகுல் காந்திக்கும் அறிவே இல்லை, சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் நன்கொடை பெறுகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில், மிஸ்டர் மோடியும் அவரது கூட்டாளிகளும் ஆயிக்கணக்கான கி.மீட்டர் இந்திய நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துள்ளனர். அதை எப்போதும் திருமப பெறப்போகிறோம் என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு ராகுல் காந்திக்கு அறிவே இல்லை என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

ராகுல் காந்திக்கு அறிவே இல்லை.. சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் நன்கொடை பெறுகிறது.. பா.ஜ.க. பதிலடி
நுபுர் சர்மா

பா.ஜ.க.வின் பிரபல இளம் தலைவர்களில் ஒருவரான நுபுர் சர்மா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் சீனாவின் செய்தி தொடர்பாளராக மட்டுமே செயல்படுகிறது. ராகுல் காந்திக்கு அறிவு இல்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது 43 ஆயிரம் கிலோமீட்டர் நிலம் சீனாவிடம் படையெடுப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு அறிவே இல்லை.. சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் நன்கொடை பெறுகிறது.. பா.ஜ.க. பதிலடி
காங்கிரஸ்

இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள் போன்றவர்கள் என்று யார் இந்த கோஷத்தை சொன்னது?. சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மானியங்களை பெற்றுள்ளது. ராஜீவ் காந்தி அமைப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் நன்கொடை பெறுகிறது. அவர்கள் இந்தியாவுக்காக அரசியல் செய்கிறார்களா அல்லது சீனாவின் பக்கம் நிற்க இங்கே நிற்கிறார்களா என்று எனக்கு புரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.