“முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவெடுக்கும்” – சி.டி.ரவி திட்டவட்டம்!

 

“முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவெடுக்கும்” – சி.டி.ரவி திட்டவட்டம்!

சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தான் முடிவெடுக்கும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்கு பிறகே அதாவது தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒன்று கூடித் தான் முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார். மேலும், பெரும்பான்மையின் அடிப்படையில் முதல்வர் வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

“முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவெடுக்கும்” – சி.டி.ரவி திட்டவட்டம்!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாஜக, முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் அறிவிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. ஆனால், அதனை ஏற்க மறுக்கும் பாஜகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் மட்டுமே கூட்டணி தொடரும் என்று கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில், முதல்வர் வேட்பாளர் குறித்து சி.டி.ரவி இவ்வாறு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.