“கூட்டணிக் கட்சிகளை குழிதோண்டி புதைக்கும் பாஜக”

 

“கூட்டணிக் கட்சிகளை குழிதோண்டி புதைக்கும் பாஜக”

காரைக்கால், திருநள்ளாறு, நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய அவர், “நாட்டில் பாஜக அல்லாத மாற்றுக் கட்சிகளின் அரசு அமைந்திருப்பதைச் செயல்படவிடாமல் தடுக்கும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபடுகிற அநாகரிக அரசியலில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

“கூட்டணிக் கட்சிகளை குழிதோண்டி புதைக்கும் பாஜக”

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸுடன் இணைந்து காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. அதிமுகவும் இதற்குத் துணைபோனது. என்ஆர்காங்கிரஸும், அதிமுகவும், பாஜகவைத் தோளில் சுமந்துகொண்டு வருகின்றன. கூட்டணியில் இருக்கும்போதே என்ஆர் கட்சியைச் சேர்ந்த 3 பேரை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது. கூட்டணியில் இருப்பவர்களைக்கூட குழிதோண்டிப் புதைக்கும் அநாகரிக அரசியலின் வடிவம் பாஜக.

“கூட்டணிக் கட்சிகளை குழிதோண்டி புதைக்கும் பாஜக”

இங்கு பாஜக காலூன்றினால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது. கலாச்சாரப் பெருமைமிக்க, பன்மைத்துவம் மேலோங்கியுள்ள புதுச்சேரியை, மதவாத பூமியாக மாற்ற பாஜக முயல்கிறது. அதற்கு இடமளிக்காமல் பன்மைத்துவத்தைக் காக்க காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டியது அவசியம்” என்றார்.