பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா!!

 

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா!!

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா!!

தமிழகத்தில் கொரோனா மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் தமிழகம் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் பொருளாதார நிலைமை என்னவாகும்?என்ற கவலையும் ஆட்கொண்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரத்து 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது.

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா!!

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையினால் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டோர், வேட்பாளர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழக பாஜக துணைத்தலைவரும், அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.