“தவறு செய்பவர்களை காப்பாற்றுவதே ஸ்டாலினின் வேலை” : பாஜக எல். முருகன்
ஸ்டாலினும் கறுப்பர் கூட்டம் சேனலுக்கும் தொடர்பு உள்ளது என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்பவர்களை கண்டிக்க வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை கொச்சப்படுத்திய கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு உள்ளது. அதேபோல் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்துள்ளார். ஸ்டாலின் பட்டியலின மக்களை கண்டித்தாலும் கண்டிக்க மாட்டார். பெண்களை இழிபடுத்தினாலும் கண்டிக்க மாட்டார். இதன் மூலம் ஸ்டாலின் தவறு செய்பவர்களை காப்பாற்றுபவராகவே உள்ளார்” என்றார்.
முன்னதாக திருமாவளவன் பெண்களை குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனால் மனுதர்ம நூல்களில் பெண்களை குறித்து கூறியதை தான் திருமாவளவன் சொன்னதாகவும் அவர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.