பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது!

 

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது!

தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது!

இந்நிலையில் தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாகவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கர் நகர் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது!

திமுக தகவல் தொழில் நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பம்மல் சங்கர் நகர் போலீசில் அளித்த புகாரில், கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாஜக ஆதரவாளராக ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர், தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை , கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார் என்று கடந்த 10-6-2021 தேதியன்று சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் இன்று நள்ளிரவு 1 மணியளவில் கிஷோர் கே சுவாமி கைதாகியுள்ளார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டி தாம்பரம் நீதித்துறை நடுவர்-2  அனுப்பிரியா அவர்களின் மாதவரம் இல்லத்திற்கு கிஷோர் கே சுவாமி அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.