திமுகவின் வன்முறை செயலை கண்டித்து பாஜக நாளை போராட்டம்!

 

திமுகவின் வன்முறை செயலை கண்டித்து பாஜக நாளை போராட்டம்!

நாளை திமுகவை கண்டித்து சென்னையில் பாஜாகவினர் 7 இடங்களில் போராட்டம் நடத்தவுள்ளனர்.

கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், “தமிழகத்தில் வன்முறைக்கு பெயர் போன கட்சி திமுக. உட்கட்சி மனப்பான்மையால் மூன்று இளைஞர்கள் தினகரன் அலுவலகத்தில் எரிக்கப்பட்டனர். ஏற்கனவே கள்ள துப்பாக்கிக்கு பெயர் போன கட்சி திமுக. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுகிறது. பதறுகிறது. அதனால் மோடி பிறந்தநாள் விழாக்களில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலந்தூரில் சுவர் விளம்பரம் செய்த பாஜகவினரை திமுக வட்ட செயலாளர் நடராஜ் மிரட்டியுள்ளார். 3 பெண்கள் காயப்பட்டுள்ளனர். அவர்களின் தங்க வளையலை காணவில்லை. ஆயிரம் விளக்கு பகுதியிலும் போஸ்டர்களை திமுகவினர் கிழித்திருக்கிறார்கள்.

திமுகவின் வன்முறை செயலை கண்டித்து பாஜக நாளை போராட்டம்!

பிரதமர் மோடியின் போஸ்டரை பார்த்து அவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களின் அராஜகம் எங்கள் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த அராஜகத்தை திமுக நிறுத்த வேண்டும். இதை கண்டித்து நாளை காலை 11 மணிக்கு பாஜகவின் சார்பில் சென்னையில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தேர்தல் நெருங்கிற நிலையில் திமுகவின் அச்சுறுத்தல் எங்களுக்கு உத்வேகத்தை தருகிறது. திமுக என்றால் வன்முறை, கட்ட பஞ்சாயத்து. எப்படி மாதிரி சட்டமன்றம் நடத்தினார்களோ, அது போல மாதிரி முதல்வர் ஆக வேண்டுமென ஸ்டாலின் விரும்புகிறார்” எனக் கூறினார்.

       -